20210705 மாதவேந்திர புரி அத்வைத ஆச்சாரியரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்து அவரை ஒரு சீடராக ஏற்றுக்கொள்கிறார் பகுதி 1
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா புத்தகத் தொகுப்பு
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா புத்தகத் தொகுப்பு
ஜூலை 5 , 2021 அன்று புனித ஜெயபதாக சுவாமி மகாராஜா அவர்களால்
ஸ்ரீதாம மாயாபூர், இந்தியா
மூகாம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரு தினா-தாரம்
பரமானந்தம் மாதாவரன் சதாரணவம்.
ஹரிஹ் ஓம் தத் சத்
அறிமுகம்: இன்று நாம் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய புத்தகத்தின் தொகுப்பைத் தொடர்வோம் , அதன் தலைப்பு:
மாதவேந்திர புரி அத்வைத ஆச்சாரியரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்து அவரை ஒரு சீடராக ஏற்றுக்கொள்கிறார் பகுதி 1
பிரிவின் கீழ்: விருந்தாவனத்திற்குச் செல்ல பகவானின் முயற்சி
சைதன்ய-பாகவதா அந்திய-கண்ட 4.420
ப்ருதிவிதே சம்பாசன-யோக்ய லோகேர அபாவ—
லோகா தேகி' துஷ்கா பாவே ஸ்ரீ-மாதவ-புரி
'ஹேனா நஹி, திலார்த்த ஸம்பாஷா யாரே கரி'
ஜெயபதாக சுவாமி: மக்களின் நிலையைக் கண்டு ஸ்ரீ மாதவேந்திர புரி மிகவும் வருத்தமடைந்தார். பேசுவதற்குத் தகுதியான எவரையும் அவர் காணவில்லை. மக்கள் கிருஷ்ண பக்தியைப் பற்றிப் பேசுவதற்கு ஸ்ரீ மாதவேந்திர புரிக்கு யாரையும் காண முடியவில்லை. மக்கள் துன்பப்படுவதைக் கண்டு அவர் மிகவும் வருத்தப்பட்டார், அதே நேரத்தில் அவர் யாரையும் காணவில்லை, உண்மையில் யாருடனும் பேச முடியவில்லை.
சைதன்ய-பாகவதா அந்திய-காண்டா 4.421
சன்னியாசிகனாவோ அபநாதிககே நாராயண அபிமான கராய மாதவேந்திரர் அசம்பாஷ்ய—
சன்யாசிர ஸனே வா கரேண ஸம்பாஷண
சேஹ அபனாரே மாத்ர பலே 'நாராயணா'
ஜெயபாதக சுவாமி: அவர் ஒரு சன்னியாசியுடன் பேச முயன்றபோது , அந்த சன்னியாசி தன்னை நாராயணர் என்று கூறிக்கொள்வார். நாராயணா!
சைதன்ய-பாகவதா அந்திய-காண்டா 4.422
இ துஷ்கே சன்யாசி-ஸாங்கே ந கஹேன கதாஹேன
ஸ்தானா நஹி, கிருஷ்ண-பக்தி சூனி யதா
ஜெயபதாக சுவாமி: இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையின் காரணமாக, அவர் சன்னியாசிகளுடன் பேசமாட்டார். பகவான் கிருஷ்ணருக்கு பக்தி சேவை செய்வது பற்றி விவாதிக்கப்படும் எந்த இடத்தையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் சன்னியாசிகள் பெரும்பாலும் மாயாவாதிகளாக இருந்தனர், அவர்கள் தங்களை மாயாவால் மூடப்பட்ட நாராயணர் என்று நினைத்தார்கள், மாயாவை நீக்கியவுடன் அவர்கள் நாராயணர் என்பதை உணர்கிறார்கள், அதனால்தான் அவர்கள் மாயாவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஏனென்றால் மாயா நாராயணனை மறைக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, இதைப் போல, ஸ்ரீ மாதவேந்திர புரி எந்த வைஷ்ணவ பிராமணரையோ அல்லது சன்னியாசியையோ அவர்களுடன் பேசக் காணவில்லை.
சைதன்ய-பாகவதா அந்திய-காண்டா 4.423
'ஞானி, 'யோகி, 'தபஸ்வி', 'சன்னியாசி,-நாமே விக்யாதா வ்யக்திகநேராவ் கிருஷ்ணாதாஸ்ய-மஹிமா ஓ கிருஷ்ணா அப்ரக்ரித ஶ்ரீநாஸ்ரீ-
'ஞானி யோகி தபஸ்வி சன்யாசி' கியாதி
யார கர முகே நஹி தாஸ்ய-மஹிமா-பிரசார
ஜெயபதாக சுவாமி: ஞானிகள், யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகள் என்று புகழ்பெற்றவர்கள் கூட பகவானுக்கு சேவை செய்வதன் மகிமைகளைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை.
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் உரை: ஜட வாழ்வில் மயங்கிக் கிடந்த மக்கள், மங்களசண்டியை வழிபடுவதன் மூலமும், அவளுடைய மகிமைகளைப் பாடுவதன் மூலமும், மதக் கொள்கைகள் மற்றும் பக்திச் செயல்களின் உயர்ந்த நிலையை அடைந்ததாகக் கருதினர். விஷஹரி மற்றும் சஷ்டி ஆகியோரின் சேவையில் அவர்கள் மிகுந்த பெருமை கொண்டனர்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தங்கள் சேவையை பரம புருஷரின் சேவைக்கு சமமாகக் கருதினர், இதன் மூலம் அவர்கள் தங்கள் கல்வி நிலையைப் பரப்பினர். அவர்களில் சிலர் தங்கள் செல்வத்தையும் குடும்பத்தையும் பெருக்கிக் கொள்ளவும், தங்கள் பொருள் ஆசைகளை நிறைவேற்றவும் அசுரர்களையும் தைத்தியர்களையும் வழிபட்டனர். அவர்களில் சிலர் சிறந்த யோகிகள், சிறந்த புலன் அனுபவிப்பவர்கள் மற்றும் ஆட்சியாளர்களில் சிறந்தவர்களின் செயல்களைப் புகழ்ந்து தங்கள் தற்காலிக பலனளிக்கும் செயல்களைப் போற்றினர். மிகவும் பக்தியுள்ள மக்கள் நீராடும் நேரத்தில் மட்டுமே புண்டரிகாக்ஷர் மற்றும் கோவிந்தரின் பெயர்களை உச்சரித்தனர். பௌதிக வாழ்க்கையில் போதையில் இருக்கும் மக்கள், கிருஷ்ணரையோ, வைஷ்ணவர்களையோ, அல்லது கிருஷ்ணரின் பல்வேறு லீலைகளின் நோக்கத்தையோ ஒருபோதும் விவாதிக்க மாட்டார்கள். பௌதிகவாதிகளின் இத்தகைய அருவருப்பான நடத்தையைக் கண்ட ஸ்ரீ மாதவேந்திரர் குறிப்பாக வருத்தமடைந்தார். நாராயணர் என்று பெருமையாகக் கூறிக்கொண்ட சிறந்த சன்னியாசிகளுடன் மாதவேந்திர புரி உரையாடக்கூட முயற்சிக்கவில்லை. உலக மக்கள் அனைவரும் பக்தித் தொண்டு இல்லாதவர்கள் என்பதைக் கண்டதால், அவர் துயரக் கடலில் மூழ்கினார். அத்தகைய மக்களை விடுவிக்கும் விருப்பத்துடன் கிருஷ்ணரின் லீலைகளை சபையாகப் புகழ்ந்து பாடும் நிகழ்ச்சியை அவர் அறிமுகப்படுத்திய போதிலும், அவரது நோக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞானிகள் , யோகிகள் , துறவிகள் மற்றும் சன்னியாசிகள் என்று அழைக்கப்படுபவர்களால் , பரம இறைவனுக்கு பக்தித் தொண்டின் மகிமைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜெயபதாக சுவாமி: இது நிலைமையின் உண்மையான படத்தை அளிக்கிறது, பகவான் சைதன்யர் மற்றும் ஸ்ரீ மாதவேந்திர புரி, அத்வைத ஆச்சாரியார் போன்ற மஹான்களின் வருகைக்கு முன்பு, அவர்கள் உலகின் இந்த சூழ்நிலையில் மிகவும் விரக்தியடைந்து துயரமடைந்தனர்.
சைதன்ய-பாகவதா அந்திய-கண்ட 4.424
யதா அத்யபக சப தர்கா சே வாகானே
தாரா சப கிருஷ்ணேர விக்ரஹ நஹி மானே
ஜெயபதாக சுவாமி: அனைத்து ஆசிரியர்களும் வறண்ட வாதத்தை மட்டுமே கற்பித்தார்கள். பகவான் கிருஷ்ணருக்கு ஒரு வடிவம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களின் பொருள்: சமஸ்கிருத ஆசிரியர்களில் சிறந்தவர்கள் வறண்ட ஊகக்காரர்களிடையே உச்ச ரத்தினங்களாக இருந்தனர். கிருஷ்ணரின் வடிவம் சாதாரணமானது என்று கருதி அவர்கள் அவரது சேவையை வெறுத்தனர். பகவானுக்கு பக்தி சேவை செய்வது பயனற்றது என்பதை வாதத்தின் மூலம் நிறுவ முயன்றனர்.
ஜெயபதாக சுவாமி: எனவே, இதுதான் நிலைமை, எல்லா மக்களும் அருவத்தன்மையில் நிராகாரத்தில் அல்லது புலன் திருப்தியில் அல்லது பக்தித் தொண்டைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த துயரமான சூழ்நிலை ஸ்ரீ மாதவேந்திர புரிக்கு துயரத்தை ஏற்படுத்தியது.
ஜூலை 06, 2021 அன்று JPS காப்பகத்தால் படியெடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது.
Lecture Suggetions
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28