Text Size

20211001 கேள்வி மற்றும் பதில்கள்

1 Oct 2021|Duration: 01:22:19|Tamil|Question and Answer Session|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்

த்விஜநாத கௌராங்க தாஸா, சில்ஹெட், பங்களாதேஷ்: பெங்காலி:  பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் எப்பொழுதும் பிருந்தாவனத்தில் இருக்கும் பொழுது, கோபியர்கள் ஏன் அவரைப் பிரிந்ததாக நினைத்து அழுதார்கள்?

ஜெயபதாக ஸ்வாமி:  அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் நதியில் பார்த்தபோது, ​​அங்கிருந்து சென்ற கிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடிய கிருஷ்ணரும் பலராமரும் ஒருவர் அல்ல என்று தோன்றியது. ஆனால் கோபிகளைப் பொறுத்த வரை கிருஷ்ணர் வெளியேறினார். அவர் அங்கே இருந்தாலும்  கண்ணுக்கு தெரியாதவராக இருந்தார். அதனால் அவர்கள் பிரிவினையை நினைத்து வருந்தினர். அது அவர்கள் கிருஷ்ணர் மேல் கொண்ட தூய அன்பினாலாகும். கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு செல்லவில்லை என்றாலும், அவர் கண்ணுக்கு புலப்படாதவராக இருந்தார். இருந்தாலும் அவரை விருந்தாவனத்தில் பார்க்க பழகிக் கொண்டனர்.

கேய ராணி:  பகவான் கிருஷ்ணர் எப்போதும் தன் பக்தர்களின் அன்பு சேவையை ஏற்று பிரதிபாலிப்பவராக இருக்கும் போது ஏன் கோபிகைகள் பகவான் கிருஷ்ணரை பிரிந்த பிரிவு துயரத்திற்கு ஆளானார்கள்?

ஜெயபதாக ஸ்வாமி: இங்கே நாம் குரு மற்றும் கிருஷ்ணரை பிரிந்திருக்கும்போது  உணரும் அன்பு, ஒன்றுபடும்போது நாம் உணரும் அன்பைவிட மேலானது என்பதைக் காண்கிறோம். எனவே கிருஷ்ணா, சில காலம் மறைந்து, கோபியர்களை மிகவும் தீவிரமான அன்பான உணர்வுகளில் வைக்கிறார். எனவே, உண்மையில் ஆன்மீக உலகில், அவர் இரண்டு வாரங்கள் மட்டுமே செல்கிறார். ஆனால் இங்கு ராதாராணி சபிக்கப்பட்டதால் கிருஷ்ணர் சிறிது காலம் தங்கினார். எனவே,  பகவான் ஸ்ரீ சைதன்யரை பின்பற்றுவதன் மூலம், நாம் பிரிந்த நிலையிலும் சேவை செய்யலாம். மேலும் அது பகவான் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துவதற்கான மிகவும் தீவிரமான சிறந்த வழியாகும்.

காக்குலி ராணி, தாமோதரதேசம்:  ஒரு கேள்வி பதில் அமர்வில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, நாங்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அனைத்து பக்தர்களின் தாமரை பாதங்களிலிருந்து தூசி எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.  நம்மை விட வயது குறைந்த மற்றும் நான்கு ஒழுங்குவிதிகளை பின்பற்றாதவர்களின் புழுதியை நாம் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? என்ன விளைவு நமக்கு ஏற்படும்?

ஜெயபதாக ஸ்வாமி:  நல்லது, சிக்ஷ்ஷாஷ்டகத்தின் மூன்றாவது ஸ்லோகத்தின்படி, நாம் ஒரு புல்லை விட தாழ்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் நரோத்தம தாஸ தகூரா, கூறுகிறார், என்னை விட தாழ்ந்தவராக யாரும் இருக்க கூடாது என்று பகவானிடம் பிரார்த்தனை செய்தார். அதனால் நான் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். நீங்கள் ஒரு பணிவான நிலையை எடுங்கள், அப்போது நீங்கள் எப்போதும் பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணையைபெறுவீர்கள்.

ஸ்பெயினியம்: பக்தர்களின் உணர்வுகளை  கருத்தில் எடுத்து கொண்டு, எந்தக் குற்றமும் செய்யாமல் இருப்பது எவ்வாறு ?

ஜெயபதாக ஸ்வாமி:  அவர்களின் உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், இயல்பாகவே நீங்கள் குற்றங்களைச் செய்வதைத் தவிர்ப்பீர்கள். அவர்களின் உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் எந்த குற்றத்தையும் செய்யாமல் இருக்க முயல வேண்டும். பகவான் கிருஷ்ணரை நினைத்து இறக்கும் எவரும் இயற்கையாகவே முக்தி பெறுகிறார்கள். விடுதலையில் ஐந்து வகை உண்டு.  அசுர குணம் படைத்தவர்கள் பிரம்ம-ஜோதியில் இணையும் முக்தியை பெறுகின்றனர். ஆனால் பக்தர்கள் அதை ஏற்பதில்லை. அவர்கள் எப்போதும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட விரும்புகிறார்கள். அதனால் கிருஷ்ணருக்குச் செய்யும் சேவையை உள்ளடக்கியிருந்தால், மற்ற நான்கு விடுதலைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions