ஜெயபதாக ஸ்வாமி: மாயாப்பூர் சந்திரோதய கோவிலில் சிறந்த பக்தர்கள் இருப்பதையும், நீங்கள் வந்திருப்பதையும் நான் காண்கிறேன், நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்! மாயாப்பூரில் பல பக்தி விருட்சக் குழுக்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் அந்த குழுக்களில் இருந்து சம்மேளனம், ஒன்றுகூடல் ஆகியவற்றிற்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் மாயாபூரை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நவத்வீப தாமம் ஸ்ரீமதி ராதாராணியால் உருவாக்கப்பட்டது. இங்கே கிருஷ்ணர் கூறினார், நவத்வீப தாமம் பிருந்தாவன தாமத்திலிருந்து வேறுபட்டதல்ல. நீங்கள் மாயாபூர், நவத்வீப தாமத்திற்கு வந்துவிட்டீர்கள், நீங்கள் எந்த சேவை செய்தாலும் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். ஹரிபோல்! நாமகட்டாவும், பக்தி விருட்சமும் நடத்தப்படுவதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சைதன்ய மஹாபிரபு, பாரத-பூமிதே ஹைல மனுஷ்ய-ஜன்ம யார/ ஜென்ம சார்தக கரி' கர பர-உபகார வேண்டும் என்று விரும்பினார். சைதன்ய மஹாபிரபு நதியா ஜில்லா (மாவட்டம்) வைச் சேர்ந்தவர். எய் ஷிக்ஷா-தியா சப் நதியா பிர்சே நிச் கௌர-நிதை. நீங்கள் நதியா அல்லது நவத்வீபாவிலிருந்து வந்திருக்கிறீர்கள், அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
கிருஷ்ணருக்கு பக்தி சேவை செய்வதே மனித வாழ்க்கையின் நோக்கம். இன்று இந்திரா ஏகாதசி, ஹரி-வாசரின் நாள். நீங்கள் இந்த ஏகாதசி திதியில் வந்துள்ளீர்கள், அதனால் சைதன்ய மஹாபிரபுவின் சிறப்புக் கருணையைப் பெறுவீர்கள். பகவான் சைதன்யரின் இயக்கத்தை நீங்கள் பிரச்சாரம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நமது பரம-குரு பக்திசித்தாந்த சரஸ்வதி தாகுரா, பிராண ஆச்சே யார சேய் ஹேது பிரசார என்றார். எனவே இப்போது, சாதாரணமாக மக்கள் தங்களை உடல் என்றும், உடலின் திருப்தியே தங்கள் குறிக்கோள் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் நாம் கிருஷ்ணரையோ அல்லது கௌரங்கரையோ பிரியப்படுத்தினால், நாமும் கிருஷ்ணரின் ஒரு பகுதியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்போம். கிருஷ்ணர் மகிழ்ச்சியாக இருந்தால், நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
பக்தி விருட்சத்தை மாதுரேஷ பிரபு நடத்துகிறார் என்பதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். கணவன், மனைவி, பெண்கள், ஆண்கள் அனைவரும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
சென்னையில் ஸ்ரீல பிரபுபாதா வியாச-பூஜை திதியில் ஒரு நாடகத்தைப் சில பக்தி-வ்ருக்ஷ கலைஞர்கள் அரங்கேற்றினர்கள். நாடகத்தில் இளம் பெண்கள் மற்றும் பையன்கள் இருந்தனர். அதில் இருவர் - யமதூதன் மற்றும் யமராஜா. யமதூதன் யமனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான், நாங்கள் அவர்களை யமலாயாவிற்கு அழைத்து வரச் செல்கிறோம், ஆனால் எல்லோரும் ஹரிநாமத்தை உச்சரிக்கிறார்கள், நாம் யாரை அழைத்துச் செல்லலாம்? அவர்கள் வீட்டில் கோயில் உள்ளது மற்றும் அவர்கள் கிருஷ்ணரின் நாமங்களை எப்போதும் உச்சரிக்கிறார்கள். அதனால் எங்கள் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. நம்மால் அதைச் செய்ய முடியாது. அவர்கள் அனைவருக்கும் கிருஷ்ண பிரசாதத்தை ஏற்கின்றனர் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அவர்களின் வீட்டில் உள்ளது, எனவே எங்களால் யாரையும் கொண்டு வர இயலவில்லை. நம் வீடுகளில் எல்லாம், கிருஷ்ண நாமம், கிருஷ்ண கல்வி மற்றும் கிருஷ்ண பிரசாதம் உள்ளது. இந்த வகையில் யமதூதர்கள் நம் வீடுகளுக்கு வரமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
ராதா கோவிந்த தாசர் மற்றும் மாதுரேச தாசர் மக்களை இந்தப் பாதையில் கொண்டு வந்ததற்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நான் இப்போது சைதன்ய-லீலா வகுப்பை தொடங்க இருப்பதால் எனது பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஹரிபோல்! ராதா கிருஷ்ணே மதிர் அஸ்து!
Lecture Suggetions
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்