Text Size

20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34

9 Oct 2021|Duration: 00:39:54|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஸ்ரீமத் பாகவதம் 1.11.34

ஏவம் ந்ருபாணாம் க்ஷிதி-பார-ஜன்மனாம்
அக்ஷௌஹிணீபி: பரிவ்ருத்த-தேஜஸாம்
விதாய வைரம் ஸ்வஸனோ யதானலம்
மிதோ வதேனோபரதோ நிராயுத:

 

மொழிபெயர்ப்பு: பூமிக்கு பாரமாக இருந்த அந்த அரசர்களைக் கொன்றபின் பகவான் சமாதனமடைந்தார். தங்களுடைய குதிரைப்படை, யானைப்படை, இரதப்படை மற்றும் காலட்படை போன்ற படைகளின் பலத்தினால் அவர்கள் திமிர்பிடித்தவர்களாக மாறியிருந்தனர். பகவான் எந்த கட்சிக்காகவும் போரிடவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த அரசர்களுக்கிடையில் போரை மட்டுமே அவர் தூண்டிவிட்டார். தங்களுக்கிடையில் அவர்கள் போர் செய்து கொண்டனர். அவர், மூங்கில்களுக்கிடையில் உராய்வை ஏற்படுத்தி, தீப்பொறியை விளைவிக்கும் காற்றைப் போல் நடந்துகொண்டார்.

பொருளுரை: மேலே குறிப்பிட்டதுபோல, பகவானின் சிருஷ்டியாக தோன்றியுள்ள பொருட்களின் உண்மையான அனுபவிப்பாளர்கள் ஜீவராசிகளல்ல. சிருஷ்டியிலுள்ள அனைத்திற்கும் உண்மையான உரிமையாளரும், அனுபவிப்பாளரும் பகவானேயாவார். துரதிர்ஷ்டவசமாக, மாயா சக்தியால் வசியப்படுத்தப்படும் ஜீவராசி, இயற்கைக் குணங்களின் தூண்டுதலால், பொய்யான அனுபவிப்பாளனாக மாறிவிடுகின்றான். தானே கடவுள் என்ற பொய்யான எண்ணத்தினால் திமிர்பிடித்தவனாக மற்றும் மாயைக்குட்பட்ட ஜீவராசி, பல்வேறு செயல்களால் தனது பௌதிக சக்தியை பெருக்கிக் கொள்கிறான். இவ்வாறாக நியாயமானவர்கள் பூமியில் வாழ முடியாத அளவிற்கு பூமியின் சுமையை அவன் ஏற்றிவிடுகிறான். இந்நிலை “தர்மஸ்ய க்லானி:”, அல்லது மனித சக்தியின் துஷ்பிரயோகம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய துஷ்பிரயோகம் மேலோங்கும்பொழுது பூமிக்கு பாரமாக உள்ள கெட்ட நிர்வாகிகளால் உண்டாக்கப்படும் கடினமான சூழ்நிலையால் நியாயமுள்ள ஜீவன்கள் கலக்கமடைகின்றனர். இதனால் நியாயமுள்ள ஜீவன்களைக் காக்கவும், உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள நிர்வாகிகளால் உண்டாக்கப்படும் சுமையைக் குறைப்பதற்காகவும், பகவான் தமது அந்தரங்க சக்தியின் வாயிலாக பூமியில் தோன்றுகிறார். மேலும் காற்று, மூங்கில்களுக்கிடையில் உராய்வை ஏற்படுத்தி, காட்டுத் தீயை உண்டாக்குவதைப் போலவே, மறைந்துள்ள தமது சக்தியால் அவர் தேவையற்ற நிர்வாகிகளுக்கு இடையில் போரை உண்டாக்குகிறார். காட்டுத் தீ காற்றின் வலிமையால் தானாகவே நிகழ்கிறது. அதைப் போலவே, கண்ணுக்குப் புலப்படாத பகவானின் ஏற்பாட்டினால், வெவ்வேறு அரசியல் பிரிவினருக்கிடையில் விரோதம் மூள்கிறது. இவ்வாறாக பொய்யான சக்தியாலும், படை பலத்தாலும் திமிர்பிடித்தலையும் தேவையற்ற நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளால் தங்களுக்கிடையில் போரிட்டு அவர்களுடைய எல்லா சக்திகளையும் அழித்துக் கொள்கின்றனர். பகவானின் இவ்விருப்பத்தை உலக சரித்திரம் நிரூபிக்கிறது. எல்லா ஜீவராசிகளும் பகவானின் தொண்டில் பற்றுக்கொள்ளும் வரை இந்நிலை நீடிக்கும். பகவத் கீதையில் (7.14) இவ்வுண்மை மிகவும் தெளிவாக விளக்ப்படுகிறது: “மாயா சக்தியானது என்னுடைய சக்தியாகும். எனவே சாதாரண ஜீவராசிகளால் பௌதிக குணங்களின் வலிமையை மீறுவது சாத்தியமல்ல. ஆனால் என்னிடம் (பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்) சரணடைபவர்களால் ஜட சக்தியெனும் பெருங்கடலைக் கடந்துவிட முடியும்.” அதாவது, பலன்நோக்குக் கருமங்களாலோ, கற்பனையான தத்துவங்களாலோ அல்லது சொந்தக் கருத்துக்களாலோ ஒருவனால் உலகில் அமைதியையும், செழுமையையும் உண்டாக்க முடியாது என்பதே இதன் பொருளாகும். பரம புருஷரிடம் சரணடைந்து மாயா சக்தியின் வசியத்திலிருந்து விடுபடுவதுதான் ஒரே வழியாகும்.

துரதிர்ஷ்டவசமாக அழிவு வேலையில் ஈடுபட்டுள்ளவர்களால் பரம புருஷரிடம் சரணடைய இயலவில்லை. அவர்கள் அனைவரும் முதல் தரமான முட்டாள்களாவர்; அவர்கள் மனிதர்களிலேயே கடைப்பட்டவர்களாவர்; அவர்கள் கல்லூரி பட்டதாரிகளைப் போல் காணப்பட்டாலும், அவர்களுடைய அறிவு அபகரிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அனைவரும் பகவானின் பரம சக்தியை எதிர்க்கும் அசுர மனம் படைத்தவர்களாவர். பௌதிக சக்தியையும், வலிமையையும் விரும்பும் தீவிரமான பௌதிகவாதிகள் முதல்தரமான முட்டாள்களாவர். ஏனெனில், உயிர் சக்தியைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. மேலும் அவ்வுயர்ந்த ஆன்மீக விஞ்ஞானத்தை அறியாததால், ஜடவுடலுடன் அழிந்துவிடும் பௌதிக விஞ்ஞானத்தில் அவர்கள் ஆழ்ந்துவிடுகின்றனர். அவர்கள் மனிதர்களிலேயே கடைப்பட்டவர்களாவர், ஏனெனில் மனித வாழ்வு முக்கியமாக பகவானுடனான மறைந்த உறவை நிலைபடுத்திக் கொள்வதற்கு உரியதாகும். பௌதிக செயல்களில் ஈடுபட்டு இவ்வாய்ப்பை அவர்கள் நழுவவிட்டுவிடுகின்றனர். அவர்கள் அறிவைப் பறிகொடுத்தவர்களாக உள்ளனர். ஏனெனில், நீண்ட கால கற்பனைக்குப் பிறகும் கூட, அனைத்திற்கும் சாராம்சமான பரம புருஷரை அறியும் நிலைக்கு அவர்களால் உயர முடியாது. பெரும் பௌதிக வீரர்களான இராவணன், ஹிரண்யகசியு, கம்சன் முதலானவர்களைப் போலவே, அசுர கொள்கைகளைக் கொண்டுள்ள அவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றனர்.

ஜெயபதாக ஸ்வாமி:  பூமி தேவி எவ்வாறு பிரம்மாவிடம் சென்று பூமியில் தேவையற்ற இராணுவப் படை, பாரமாக இருக்கிறது என்று புகார் கூறியதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். பிரம்மா பகவான் க்ஷீரக் கடல், பாற்கடலின் கரைக்குச் சென்று, என்ன செய்வது என்று இறைவனிடம் வேண்டினார். பகவான் கிருஷ்ண பலராமர் வருவார் என்று  பதில் அளித்தார். அவ்வாறே துவாபர யுகத்தின் இறுதியில், கிருஷ்ணர் பலராமர் தோன்றினார். பூமியில் உள்ள தேவையற்ற கூடுதல் இராணுவச் சுமையை அகற்றுவது இறைவனின் பணிகளில் ஒன்றாகும். குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவர்களுடன் நேரத்தைச் செலவிட்ட பிறகு இப்போது அவர் மீண்டும் துவாரகைக்கு வருகிறார். துரியோதனன் தன்னிடம் ஒரு பெரிய படை இருப்பதாகவும், தனக்கு பீஷ்மதேவன், துரோணாச்சாரியார் இருப்பதாகவும் பெருமிதம் கொண்டார். கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் சமாதானத்திற்குத் தூதராகச் சென்றார். அவர்கள் ஆட்சி செய்யக்கூடிய ஐந்து கிராமங்களைத் தங்களுக்குத் தருமாறு துரியோதனனைக் கேட்டார். ஆனால் துரியோதனன் நீங்கள் ஒரு முள் போடக்கூடிய அளவுக்கு கூட நிலத்தை கொடுக்க மாட்டேன் என்று கூறினான். துரியோதனன் கிருஷ்ணரை கைது செய்ய முயன்றான், இருப்பினும் அவர் தூது நெறிமுறையால் பாதுகாக்கப்பட்டார். கிருஷ்ணர் துரியோதனனுக்கு ஒரு வகை விஸ்வரூபத்தைக் காட்டினார். அதைப் பயன்படுத்தி அவர் அந்த இடத்தை விட்டு தப்பினார். இவ்லாறு துரியோதனனுக்கு,  சமாதானம் செய்ய அவருக்கு எல்லா வாய்ப்புகளும் கொடுக்க பட்டது. அவரது தற்  பெருமையின் காரணமாக  போரை நடத்த விரும்பினார்.  உலகில், கிரேக்கத்தில், துருக்கியில், அமெரிக்காவில் பல காட்டுத்தீகள் இருப்பதை நாம் பார்த்தோம். இது எப்படி தொடங்குகிறது, யாருக்கும் தெரியாது. இரண்டு மூங்கில்கள் அல்லது இரண்டு மரங்கள் வீசும் காற்றினால் அவை ஒன்றையொன்று தேய்த்து நெருப்பை மூட்டுகின்றன. எனவே கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் ஈடுபடவில்லை, ஆனால் காற்றைப் போல, அவர் அவர்களை சண்டையிடச் செய்தார். இவ்வாறே அசுர அரசர்கள் ஒருவரை யொருவர் கொன்றனர். மேலும் கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் சண்டையிடவில்லை. அதுபோல கிருஷ்ணரிடம் சரணடைந்த மன்னர்கள், அவருடைய சாந்திச் செய்தியை ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் ஒருவரையொருவர் போரில் கொன்றனர். இந்த வழியில், அரிய மனித வடிவத்தைப் பெறுவதன் மூலம் அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

சைதன்ய மஹாபிரபு நம் மனித வாழ்க்கையை வெற்றியடையச் செய்ய அவதரித்துள்ளார். எனவே, பகவான் ஸ்ரீ சைதன்யா், மக்களின் இதயத்தை மாற்றியமைத்தார். அவர் அரக்கர்களைக் கொல்லவில்லை, ஆனால் அவர்களின் அசுர குணத்தைக் கொன்றார். எனவே பகவான் ஸ்ரீ சைதன்யர் மிகவும் சிறப்பான அவதாரம். அவருடைய இயக்கத்தில் இருப்பதற்கு நமக்கு மிகப் பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீல பிரபுபாதர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு வந்தார். நீங்கள் பார்க்கிறீர்கள் மக்கள் அவரைப் பற்றி வேறு ஏதேனும் எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஹரே கிருஷ்ணரை உச்சரித்தால் அவர்கள் தூய்மை அடைவார்கள். துருவ மகாராஜா, அவர் தனது தந்தை அல்லது தாத்தாவை விட பெரிய ராஜ்ஜியத்தை விரும்பினார், ஆனால் அவர் இறைவனின் தரிசனம் பெற்றவுடன் வேறு எதையும் விரும்பவில்லை. அதனால் அவர் ஒரு தூய பக்தரானார். அவர் வைகுண்டம் அல்லது  விஷ்ணு-லோகம் எனும் ஆன்மீக உலகத்திற்குத் திரும்பினார். அதைதான் நாம் துருவ-லோகம் என்று அழைக்கிறோம், அது உண்மையில் ஒரு விஷ்ணு கிரகம் அல்லது வைகுண்ட கிரகம். மேலும் துருவ மகாராஜா பல துறவுகள் செய்து முக்தி பெற்றார். துருவ மகாராஜா போன்ற கடினமான துறவுகளை நாம் செய்ய முடியாது. ஆனால் நாம்  பகவான் ஸ்ரீ சைதன்யரை பின்பற்றினால், தூய பக்தியை மிக எளிதாக அடையலாம். ஒருவேளை இந்த தொற்றுநோயிலிருந்து விடுபட நாம் மந்திரஜெபம் செய்யலாம். ஆகையால் சைதன்யரின் கருணையால் நாம் தூய்மை அடைய முடியும். அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தால் அலைகளால் நாம்  அலைக்கழிக்கப்படுவோம் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். அட்லாண்டிக் பெருங்கடல் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நாம் சொன்னால் அது இயலாது அது அட்லாண்டிக் பெருங்கடலின் இயல்பு, அது அலை அலையானது. கடலுக்கு வெளியே செல்வதே தீர்வு. நாம் இந்த பூமியில் அமைதி வேண்டும் என்று நினைத்தால், அதனால் இங்கே இருக்கும் போது எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று நினைத்தால், அது ஒருபோதும் சாத்தியமில்லை.

பௌதிக உலகின் இயல்பு பிரச்சனைகள் கொண்டிருப்பது. விஞ்ஞானிகள் எவ்வளவு ஊகித்து திட்டங்களை உருவாக்கினாலும், நமக்கு இன்னும் நோய், இறப்பு, முதுமை மற்றும் மறுபிறப்பு உள்ளது. எனவே, இந்த உலகத்தை விட்டு வெளியேறுவதே உண்மையான தீர்வு. நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் அதைச் செய்ய முடியும். இப்போது கிருஷ்ணரிடம் சரணடைவது மற்ற யுகங்களில் கடினமாக இருந்தது. இந்த கலி யுகத்தில் பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணையால் இறைவனிடம் சரணடைவது மிகவும் எளிதாகிவிட்டது. யார் தகுதியானவர், யார் தகுதியற்றவர் என்று அவர் நினைக்கவில்லை, அவர் தனது கருணையை அனைவருக்கும் வழங்குகிறார். எனவே, பனாரஸில் உள்ள மாயாவாதிகளைக் கூட, அவர் வைஷ்ணவர்கள் ஆக்கினார். பிருந்தாவனத்தில், பிராமணர்கள், "உண்மையில், நீங்கள் கிருஷ்ணர்!" என்று பகவான் ஸ்ரீ சைதன்யரிடம் கூறுவர், தன்னை ஒரு முறை பார்த்தாலும், ஒரு பெண்ணாக, குழந்தையாக, முதியவராக, நாய் உண்பவராக யாராக இருந்தாலும்,  அவர்கள் அனைவரும் உலகின் ஆன்மீக குருவாக முடியும் என்று பகவான் ஸ்ரீ சைதன்யர் கூறுவார். ஒரே  ஒருமுறை தரிசனம் செய்தாலே போதுமானது. மேலும் பகவான் ஸ்ரீ சைதன்யரின் பெயரைக் கேட்டாலே உலகம் முழுவதையும் விடுவிக்க முடியும் என்று அடுத்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. சைதன்ய மஹாபிரபுவின் கருணையும் அப்படிபட்டது தான்!

இன்று உலகில் எத்தனையோ காலநிலை பிரச்சனைகளை நாம் காண்கிறோம். தீ, எரிமலைகள், பூகம்பங்கள், சூறாவளி,  தொற்றுநோய் மற்றும் இந்த உலகம் மிகவும் பயங்கரமான இடம். ஆனால், இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்போம் என்று விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஒரு பிந்தைய காசோலையை கொடுக்கிறார்கள். இரட்டை தடுப்பூசி போடுபவர்கள் கூட நோய்வாய்ப்படுவதை நாம் காண்கிறோம். அவர்கள் விலங்குகளால் கடிக்கப்படுகிறார்கள், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கார் விபத்துக்கள், விமான விபத்துகள். எனவே இந்த ஜடவுலகில் எப்போதும் பிரச்சனைகள் இருக்கும். நாம் கிருஷ்ணரிடம் அடைக்கலம் பெற்று இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டும். புனித நாமங்களை உச்சரிப்பதே எளிதான வழி.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 
ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே!

நாம் அனைவரும் இறைவனின் திருநாமங்களை உச்சரிக்க முயற்சி செய்கிறோம். ஸ்ரீல பிரபுபாதா ஹரேர் நாம என்றால் இறைவனின் பெயர்கள் என்று கூறினார். எனவே மக்கள் ஹரே கிருஷ்ணரை ஜபிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் எந்த கடவுளின் பெயரையும் உச்சரிக்கலாம். அவர்கள் அல்லா, யெகோவா அல்லது கிருஷ்ணர் அல்லது ராமரை ஜபிக்கலாம். கிருஷ்ணர் சமஸ்கிருதத்தில் இருக்கிறார். மேலும் சமஸ்கிருதம் நமது தாய் மொழி. அனைத்து மொழிகளும் சமஸ்கிருத மொழியிலிருந்து வெளிப்படுகின்றன. கிருஷ்ணா என்றால் அனைத்தையும் கவர்ந்திழுக்கும் நீர்த்தேக்கம் அல்லது எல்லா மகிழ்ச்சிக்கும் ஆதாரம் என்று பொருள். ஆக மொத்தம் பரம புருஷ பகவான் என்று அர்த்தம். அதனால் தான், கிருஷ்ணரின் நாமத்தை ஒருவர் உச்சரித்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் வேறு ஏதாவது பெயரை உச்சரிக்க விரும்பினால், அது கடவுளின் பெயராக இருக்கும் வரை, அது பரவாயில்லை. எனக்கு தெரிந்த கன்னியாஸ்த்ரி ஒருவர்  தென் அமெரிக்காவில்  இருந்தார், அவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை ஜெபத்தில் உச்சரிப்பார். பிறகு நான் ஏன் ஹரே கிருஷ்ணா என்று ஜபிக்கக் கூடாது என்று நினைத்தாள். பின்னர் ஹரே கிருஷ்ணா என உச்சரிக்க அது இயேசு கிறிஸ்துவின் மந்திரம் போல் இருந்தது, ஆனால் சிறப்பாக இருந்தது என்று அவள் கண்டாள். அதுபோல, மக்கள் புனித நாமத்தை அடைக்கலம் கொள்ள முயற்சிக்கின்றனர். இது  பகவான் ஸ்ரீ சைதன்யரின்  இயக்கம்.

எனவே பகவான் ஸ்ரீ சைதன்யரை  தஞ்சம் அடையும் அனைத்து பக்தர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறே அனைவரும் இறைவனின் திருநாமங்களை அடைக்கலம் பெற முயற்சிப்பார்கள் என நம்புகிறோம். கலியுகத்தில் இதுதான் ஒரே வழி.

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நமைவ கேவலம்
கலௌ நாஸ்த் ஏவ நாஸ்த் ஏவ நாஸ்த் ஏவ  கதிர் அன்யதா

கலியுகத்தில் இதுதான் ஒரே வழி, ஒரே வழி, ஒரே வழி. எனவே, வாதிடுவதற்கு எந்த காரணமும் இல்லை, வெறும் மந்திர உச்சாடனம். ஸ்ரீல பிரபுபாதர், “மந்திரம், மந்திரம், மந்திரம்!” என்று யாரோ ஒருவர் கூறிவதாக ஒரு உதாரணம் சொன்னார். ஆனால் அந்த பௌதிகவாதி, “என்னால் முடியாது, என்னால் முடியாது, என்னால் முடியாது!” என்று பதிலளித்தார். எனவே, அவர் சிறிதளவு கூட ஜபித்தால் போதும் அவரது வாழ்க்கை வெற்றி பெறும்.

அங்கே ஒரு காஜியும் ஒரு வைஷ்ணவரும் இருந்தனர். வைஷ்ணவர் காஜியிடம் நீங்கள் மிகவும் அழகாகவும், உயரமாகவும், மிகவும் புத்திசாலியாகவும் இருக்கிறீர்கள், நான் ஒன்று கேட்க வேண்டும் என்றார். சரி என்றார் காஜி. வைஷ்ணவர் சொன்னார், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஹரே கிருஷ்ணா என்று ஜபம் செய்யுங்கள்! என்று கூறினார். நான் நாளை ஹரே கிருஷ்ணா ஜபிப்பேன் என்றார் காஜி. வைஷ்ணவர் சொன்னார், நீ ஏற்கனவே ஆரம்பித்துவிட்டாய், இப்போது நிறுத்தாதே! என்று. எனவே எப்படியாவது அல்லது வேறு எந்த வழியிலாவது நாம் மக்களைப் பாட வைக்க வேண்டும். இல்லையெனில் நாம் காண்கிறோம் இந்த பௌதிக உலகில் பல்வேறு வகையான பிரச்சினைகள் இருப்பதை. இறைவனின் திருநாமங்களை உச்சரிப்போம், மீண்டும் இறைவனிடம் செல்வோம். ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம  ராம ராம, ஹரே ஹரே! கௌராங்கா! ஜெய சச்சிநந்தன கௌர ஹரி!

 எனவே சில கேள்விகள் பார்க்கலாம் . பின்னர் நாங்கள் கோவில் தரிசனம் மற்றும் வீடுகளுக்கு செல்ல இருக்கிறோம்.

பெங்காலி: பகவான் சைதன்யரின் கருணையைப் பெற்றவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். பகவான் சைதன்யரின் கருணையைப் பெற்றுள்ளோம் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?

ஜெயபதாக ஸ்வாமி: இந்தக் கேள்வி, மதிய உணவு சாப்பிட்டுவிட்டால், மதிய உணவு சாப்பிட்டுவிட்டோமா இல்லையா என்பதை எப்படிப் புரிந்துகொள்வோம்! சைதன்ய பகவானின் கருணையால் அது உன்னிடம் இருப்பதை அறிவாய். நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் இன்னும் ஒரு நியோஃபைட் என்று அர்த்தம். நீங்கள் தொடர்ந்து ஜபித்தால், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், அது உங்களுக்கு வெளிப்படும். பகவான் சைதன்யரே அவ்வாறுதான் அத்தகைய பரவசத்தை உணர்ந்தார், அவர் தனது தாமரை வாயிலிருந்து நுரை பொங்குவதும், அவர் கண்களில் ஏராளமான கண்ணீர் வழிந்தோடுவதும் வழக்கமாக இருந்தது. மான் அவரது நுரையிலிருந்து நுரையை நக்கும், பறவைகள் அவரது கண்ணீரின் தண்ணீரைக் குடிக்கும். மான்களும் பறவைகளும் புரிந்து கொண்டன, உங்களால் ஏன் முடியாது?

கேள்வி:  இந்தப் பௌதிக உலகின் ஆபத்துகளை நாம் எவ்வாறு வழிநடத்தலாம்? நாம் பக்தியில் மட்டும் முனைப்பாக இருந்து மீதியை கௌரங்கரிடம் விட்டுவிட வேண்டுமா?

ஜெயபதாக ஸ்வாமி:  பகவான் ஸ்ரீ சைதன்யர் அறிவுறுத்தினார், உங்கள் இதயத்தை எப்போதும் பகவான் கிருஷ்ணரிடம் வைத்திருங்கள். ஜட ரீதியாக உங்கள் செயல்பாடுகளை மிகவும் பொறுப்புடன் செய்யுங்கள். யாராவது கடலில் விழுந்தால், கடல் அமைதியாக இருக்கட்டும் என்று நினைத்தால், அது சாத்தியமில்லை என்று நான் குறிப்பிட்டேன். அட்லாண்டிக்கடல் பெருங்கடலாக இருக்கும். மேலும் இந்த ஜடவுலகம் துன்பம் நிறைந்த இடமாகும். துக்காலயம் அஸாஸ்வதம் என்று பகவத் கீதை கூறுகிறது. இது ஒரு துன்பம் நிறைந்த இடம் மற்றும்  தற்காலிகமானது. அதனால் உங்களுக்கு குறைவான துன்பம் இருந்தால் அது மிகவும் நல்லது என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு அதிக துன்பம் இருந்தால் அது மிகவும் மோசமானது என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையான தீர்வு இந்த இடத்தை விட்டு மீண்டும் மீண்டும் கடவுளிடம் வீட்டிற்குத் திரும்பி  செல்வதுதான்.

ஸுபாஹு சச்சிஸுதா தாஸா, சுபத்ரா குரல், கட்டகிராமம்:  பக்தர்களின் பிரச்சார முயற்சியால் பலர் கிருஷ்ண உணர்விற்கு அழைத்துச் செல்ல படுகிறார்கள், அவர்களில் படிப்பில் ஈடுபடும் பல சிறு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் படிப்பிற்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள் மற்றும் அவர்களின் குடும்பம் மற்றும் பெற்றோரிடமிருந்து நிதி உதவி பெறுகிறார்கள். இப்போது இவர்கள், கிருஷ்ண உணர்வுக்கு வரும்போது, ​​நாம் அவர்களைக் கவர்ந்தால் அல்லது பண உதவியால் அவர்களை உற்சாகப்படுத்தினால், இது ஒரு நல்ல திட்டமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?

ஜெயபதாக ஸ்வாமி:  ஸ்ரீல பிரபுபாதர் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றபோது, ​​யாரேனும் கல்வியைத் தொடங்கினால், அவர்களை வெளியேறுமாறு ஊக்குவித்தார். ஏனென்றால் கிருஷ்ண உணர்வைப் பரப்ப அவருக்கு உதவியாளர்கள் தேவைப்பட்டனர். ஆனால் மக்கள் ஏற்கனவே கல்வியில் முன்னேறியிருந்தால், அவர் அவர்களைப் போய் முடிக்கச் சொல்வார். எனவே கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூலம் அடித்தளம் அமைத்து, அங்கே தங்கி, ஹரே கிருஷ்ணா ஜபிக்கக்கூடிய வகையான ஆன்மீக விடுதிகளை நாங்கள் நிறுவியுள்ளோம். நாங்கள் அதை செய்கிறோம். அவர்களின் படிப்புக்கு பணம் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. இப்போது, ​​மக்கள் தங்கள் படிப்பை கைவிடுமாறு நாங்கள் ஊக்குவிக்கவில்லை, ஆனால் கிருஷ்ண உணர்வில் மனதை எவ்வாறு வைத்திருப்பது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கிறோம். மேலும் அவர்களில் பலர்  கிரஹஸ்தர்கள் ஆகிறார்கள், அவர்களில் சிலர் பிரம்மசாரிகள் ஆகிறார்கள்.எந்தச்  சூழ்நிலையிலும் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்கிறோம். நம்மிடம் நிறைய பணம் இருந்தால் ஒழிய பணம் கொடுப்பதுபற்றி எந்த கேள்வியும் எழாது. எப்படியிருந்தாலும், அவர்களின் கல்விக்கு பணம் கொடுத்தால், அவர்கள் கிருஷ்ண உணர்வில் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எங்களிடம் வேலை இருந்தால்,  அவர்களுக்கு பணம் கொடுக்கலாம், சில தொழில்கள் ஸ்காலர்ஷிப் கொடுப்பது போல ஆனால் நீங்கள் அந்த வணிகத்திற்காக உழைத்தாக வேண்டும். எனவே இது எதிர்காலத்தில் நாம் சிந்திக்கக்கூடிய ஒன்று.        

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions