Text Size

20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.

17 Oct 2021|Tamil|Public Address|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்


ஜெயபதாகா ஸ்வாமி: 
எனவே, ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் ஒவ்வொரு இரவும்மொழிபெயர்க்க பெரும் பிராயத்தனம் செய்தார்.  நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை அவர் ஒவ்வொரு இரவும் மொழிபெயர்க்கிறார். எனவே, சில நேரங்களில் அவர் என்னை அழைக்கிறார், நான் கீழே வருகிறேன், அவர் ஒரு டிக்டா-போனில் மொழிபெயர்ப்பதை நான் காண்கிறேன். அவர் ஏழு பிரதிகளுடன் கூடிய ஒரு சிறப்பு பாகவதத்தைக்கொண்டிருந்தார் . எனக்கு எல்லாம் நினைவில் இல்லை, இருப்பினும் ஸ்ரீதர ஸ்வாமி (ஸ்ரீதர மஹாராஜா), பலதேவவித்யாபூஷணன், மத்வாச்சாரியார் போன்றவர்கள் பற்றிய பிரதிகள் அவை. எனவே இதுபோல அவர் அவர்களின்  பிரதிகளைமொழிபெயர்த்து தனது சொந்த அனுபவத்தையும் அதில் சேர்ப்பார் . எனவே, தற்போதைய தலைமுறையினர் ஸ்ரீலபிரபுபாதாவின் புத்தகங்களைப்படிப்பதன் மூலம் அவருடைய தொடர்பைப் பெறுவது போன்ற ஆதாயம் அடையலாம்,  பக்தி-சாஸ்திரத்தை ஒருவர் எவ்வாறு பெறலாம் என்பது பற்றிய விளக்கங்கள் தரும் வகையில் பகவத் கீதை மற்றும் சில சிறு புத்தகங்களையும்  வழங்கினார் .

ஸ்ரீமத் பாகவதத்தின்  முதல் ஆறு காண்டங்களைப்படிப்பதன் மூலம்  பக்தி-வைபவத்தைப்பெறலாம் . ஸ்ரீமத்-பாகவதத்தின் ஏழு முதல் பன்னிரண்டு காண்டங்களைப்படிப்பதன் மூலம் ஒருவர் பக்தி-வேதாந்தா பட்டம் பெறலாம் . சைதன்ய-சரிதாம்ருதம் மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்யரின் பிற இலக்கியங்களைப்படிப்பதன் மூலம் , ஒருவர் பக்தி-சர்வபௌமத்தை பெற முடியும் .

எனவே, பக்தர்கள்ஸ்ரீலபிரபுபாதரின் புத்தகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதைச்செய்வதன் மூலம், ஒருவர் கிருஷ்ண உணர்வை முழுமையாக அடைவர். எனவே, குறிப்பாக புதிய பக்தர்களுக்கு, ஸ்ரீலபிரபுபாதாவுடன்இணைவதற்கான சிறந்த வாய்ப்பாகும் இது. மேலும் ஸ்ரீலபிரபுபாதருக்குகிருஷ்ணஉணர்வைப் பற்றி மிக ஆழமான அனுபவம் இருந்தது. எனவே அவருடைய புத்தகங்களைப்படிப்பதன் மூலம் புரிந்துணர்தலை பெற முடியும். மேலும் இது மிகவும் முக்கியமானது அனைவரும் ஸ்ரீலபிரபுபாதாவுடன் இந்த விதத்தில் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது.

 

சென்னையிலுள்ள பக்தர்கள் ஸ்ரீலபிரபுபாதாவின் புத்தகங்களைப் படிப்பதற்காக தங்கள் நேரத்தைச் செலவிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இந்த வழியில், அவர்கள் அனைத்து தத்துவங்களிலும் நிபுணர் ஆக முடியும். எனவே, ஸ்ரீமத் பாகவதத்தில் எங்கும் அமிர்தம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் எங்கு கடித்தீர்கள் என்பது முக்கியமல்ல, அது இன்னும் அதே அமிர்தசுவையைகொண்டுள்ளது. எனவே, நம் வாழ்க்கை உண்மையில் மிக மிகக் குறைவு. கலியுகத்தில் நூறு ஆண்டுகள் என்று கூறினாலும் மக்கள் எண்பது ஆண்டுகள் வாழ்வதே கடினமாக உள்ளது. நாம் எதை எடுத்துச் சென்றாலும் ... நம்மால் பணம் எடுத்து செல்ல முடியாது, நம் ஆடைகள், வீடு, கார் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் நாம் நமது கிருஷ்ண உணர்வை எடுத்துக் செல்லலாம். அதனால்தான் ஸ்ரீலபிரபுபாதாவின்பொருளுரைகளுடன் கூடிய  ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பது மிகவும் முக்கியமானது . உங்கள் பங்கேற்புக்கு மிக்க நன்றி. ஹரேகிருஷ்ண!

 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by காந்தர்விகா மோகினி தேவி தாஸி
Reviewed by

Lecture Suggetions