Text Size

20210628 கேள்வி மற்றும் பதில்கள் நேரம்

28 Jun 2021|Duration: 00:10:45|Tamil|Question and Answer Session|Śrī Māyāpur, India

 கேள்வி மற்றும் பதில்கள் நேரம்

சத்யராஜா கோவிந்த தாஸா, அமெரிக்கா:  இப்போது எங்காவது அச்யுதா-ஸாகாவை காணமுடியுமா?

ஜெயபதாகா ஸ்வாமி: மாயாப்பூரில் ஸாகா திருவிழாவை நடத்த வேண்டும், அதனால் பல்வேறு ஸாகாக்களைக் காட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் என்ன ஸாகாக்கள் உள்ளன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கே மாயாப்பூரில் அவர்கள் பலவிதமான ஸாகாக்களைக் கொண்டுள்ளனர். ஹெலன்ச்ச-ஸாகா என்பது தாமரை குளத்தின் மேலே வளரும். அமெரிக்காவில் எங்கு தாமரைக்குளம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வளரலாம். ரஷ்யாவிலும் கூட.

லக்ஷ்மி ராதா தேவி தாஸி:  சமீபத்திய வகுப்பில் ஒரு குடும்பத்தில் ஒரு தூய பக்தன் இருந்தால், அவருடைய பதினான்கு தலைமுறைகள் விடுதலை பெறும் என்று குறிப்பிடப்பட்டது. ஆகவே, குழந்தைகள் அத்வைத ஆசார்யரின் விஷயத்தில் ஸ்மார்த்த-பிராஹ்மண குமாரர்களைப் போல பக்தர்களாக இல்லாவிட்டாலும்  அவர்களும் முக்தி பெற்று ஆன்மிக கிரகங்களில் பிரவேசம் பெறுவார்களா?

ஜெயபதாக ஸ்வாமி:  நீங்கள் ஒருவரை தூய பக்தராக மாற்ற வேண்டும். அதாவது உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால், ஒருவரை தூய பக்தராக ஆக்குங்கள்.

மெரினா, க்ரஸ்னோடர், ரஷ்யா:  ஹரே கிருஷ்ண குருதேவா! நான் சந்நியாசத்தை துறக்கும் சபதம் எடுக்கலாமா? இதைப் பற்றி உங்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதினேன். உங்கள் தாமரை பாதங்களிலிருந்து தோன்றிய கருணைக் கடலுக்கு நன்றி.

ஜெயபதாக ஸ்வாமி:  சந்நியாசம் பெண்களுக்கானது அல்ல. பெண்கள் தங்கள் தந்தை, கணவர் அல்லது மூத்த மகனால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு பெண் சன்னியாசியைப் போல் தனியாகச் சென்றால், அவள் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். எனவே அவள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.

திவ்யாங்கி லலிதா தேவி தாஸி, ஒமேஹா, யூஎஸ்ஏ :   பிரசாதம் சாப்பிடும் மனப்பான்மையால் நமது உணர்வுகள் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறது மற்றும் பிரசாதத்தை கெளரவிக்க சரியான மனநிலையை எப்படி உருவாக்கி கொள்வது, சொல்ல முடியுமா?

ஜெயபதாக ஸ்வாமி:  பகவான் சைதன்யர், கடவுளுக்கு பிரசாதத்தை அர்பணித்தார், வணக்கம்  செலுத்தினார், மிகுந்த மரியாதையுடன் பிரசாதத்தை கௌரவித்தார். நான் இன்னும் என்ன சொல்ல முடியும்?

கேள்வி (தமிழில்):  முட்டைக்கோஸ் ஸாகாவாகக் கருதப்படுகிறதா. கொத்தமல்லி, புதினா கறிவேப்பிலை ஸாகா என்று கருதப்படுகிறதா? மேலும் சில ஸாகாக்கள் வங்காளத்தில் மட்டுமே கிடைக்கின்றன, தமிழ் நாட்டில் இல்லை. அப்படியானால், சைதன்ய மஹாபிரபுவுக்கு இவற்றை எவ்வாறு சமர்ப்பிப்பது?

ஜெயபதாக ஸ்வாமி:  நீங்கள் ஸாகாவை வளர்க்கலாம். விதைகளைப் பெறுங்கள். கீரை தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஸாகா என்பது எனக்குத் தெரியாது. நாம் அதை ஒரு ஸாகா போல தயார் செய்யலாம். பொதுவாக, பாதா-கோபி - முட்டைக்கோஸ்  ஸாகாவாகக் கருதப்படுகிறதா என்பது எனக்குத் தெரியாது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் ஒரு வகையான மசாலா. அதனால்இவை வெவ்வேறு காய்கறிகள் மற்றும் பொருட்களின் இலைகள் போன்றவை. எனவே சில விஷயங்கள் தமிழ் நாட்டில் இருக்கலாம், மேலும் அவற்றில் பொடலை  மற்றும் பூசணி இலைகள் இருக்கும். எனவே, வெவ்வேறு ஸாகாக்களின் ஒரு விரிவான பட்டியலை உருவாக்கி, தமிழ் பக்தர்களுக்குத் தமிழ்நாட்டில் எவை உள்ளன என்பதைப் பார்க்கும்படி பக்தர்களைக் கேட்கலாம்.

மதுரா லீலேஸ்வரி தேவி தாசி, கீதா நகரி, அமெரிக்கா:  ஹரே கிருஷ்ண குரு மஹாராஜா! குருகுலத்திற்கு எதிராக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று பல விவாதங்கள் உள்ளன. வீட்டுப் பள்ளி அல்லது பக்தர் நடத்தும் பள்ளிகளா? பக்தர் நடத்தும் பள்ளி அல்லது குருகுலா இல்லாத ஒரு இடத்தில், எங்கள் குழந்தைகளை கர்மீக்கள் நடத்தும் பள்ளிக்கு அனுப்புவது சரியா?

 ஜெயபதாக ஸ்வாமி:  நான் சொல்ல நினைக்கும் பள்ளியை நீங்கள் பார்க்க வேண்டும். நிலைமை என்னவென்று பாருங்கள். எனது தென் அமெரிக்க சீடர்களில் ஒருவரான அவள் தன் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்றாள், தற்செயலாக அவள் மதிய உணவுப் பெட்டியை அசைவப் பெட்டிக்கு மாற்றினார்கள். பள்ளிக்குச் சென்று முறையிட்டாள். இது  கார்த்திகை அதாவது தாமோதர மாதம் ஆயிற்றே. எனவே  நீங்கள் அனைத்து மாணவர்களையும் கொண்டு விளக்கு ஏற்றி பிரசாதம் தயாரிக்க முடியுமா? என கேட்க, பின்னர் அவர்கள் மெழுகுவர்த்திகளைக் கொண்டு வந்தனர், மேலும் அனைத்து மாணவர்களும் யசோதா தாமோதரருக்கு விளக்குகளை வழங்கினர். அப்படியென்றால் அது எப்படிப்பட்ட பள்ளி என்பதை நீங்கள் பார்க்கலாம். அது பார்ப்பனியப் பள்ளியாக இருந்தாலும் சரி. சொல்வது பொதுவாக கடினம். நீங்கள் ஏன் சன்னியாசியிடம் இவற்றைக் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் கிருஹஸ்தாக்களைக் கேட்க வேண்டும்!

கேள்விகள்:  அச்யுதானந்தன் அத்வைத ஆசார்யரின் தகுதியான மகனாகவும், சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் கருணையைப் பெற்றதைப் போலவும் அத்வைத ஆசார்யரின் தகுதியற்ற மகன்கள் யாராவது இருந்தார்களா?

ஜெயபதாக ஸ்வாமி:  அவருக்கு ஆறு மகன்கள். மூன்று பேர் பக்தர்கள், மூன்று பேர் ஸ்மார்த்தர்கள். 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions