மூகம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சத்வத்னம்
ஹரி சைதன்ய ī.
ஜெயபதாகா சுவாமி: இதுபோலவே, ஹரே கிருஷ்ணா என்று ஜபிக்க புதியவர்களை நாம் ஊக்குவிக்க விரும்புகிறோம்! ஒரு வருடத்தில் எத்தனை பேரை ஜபிக்க நாம் ஊக்குவிக்க முடியும்? ஒரு மாதத்தில்? ஹரே கிருஷ்ணா என்று ஜபிக்க மற்றவர்களை ஊக்குவிக்க அனைவரும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! இந்தியாவில் மக்கள் பொதுவாக பக்திமான்களாக இருக்கிறார்கள், எனவே நாம் அவர்களை ஜபிக்க ஊக்குவிக்க வேண்டும். ஒரு புத்தக விநியோகஸ்தராக இருந்த ஒரு பக்தர் எனக்கு எழுதினார். அவர் " ஹர் கர் பாகவதம் " செய்ய முயன்றுகொண்டிருந்தார், மேலும் ஒரு மாதத்தில் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆயிரம் பிரதிகளை எந்தத் தள்ளுபடியும் இல்லாமல் விநியோகிக்க விரும்பினார் !! மேலும், ஸ்ரீமத் பாகவதத்தை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது. ஸ்ரீல பிரபுபாதர், மிகவும் பொருள் சார்ந்த நகரமான மும்பையில் இந்த கோவிலை நமக்கு வழங்கினார். பக்தர்கள் இங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், மும்பை முழுவதுமே பக்தர்களாக மாற வேண்டும் என்றும் அவர் விரும்பினார்! உண்மையில், அதைச் செய்ய வேண்டியது நீங்கள்தான்! உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவழைத்து, ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சரித்து அவர்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்ய வேண்டும்! அந்த மகா மந்திரத்தின் மகிமைகளை நீங்கள் அவர்களுக்கு விளக்க வேண்டும்! அதில் எத்தனையோ மகிமைகள் உள்ளன! எத்தனையோ மகிமைகள்! மகா மந்திரம் நமது சிறந்த நண்பன்! மகா மந்திரத்தை விட சிறந்த நண்பன் வேறு யாரும் இல்லை . மகா மந்திரம் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல, ஆனால் திருநாமத்தை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் தெய்வத்திற்கு ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால் நீங்கள் திருநாமத்திற்கு தவறு செய்தால், திருநாமத்தைத் தவிர வேறு யாரும் உங்களை மன்னிக்க முடியாது, ஏனெனில் திருநாமம் மிகவும் கருணையானது! எனவே நாம் ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை கவனத்துடன் உச்சரித்து , மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.
எல்லா யுகங்களிலும் ஹரினாமமே மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் இந்தக் கலியுகத்தில் தியானம், கோயில் வழிபாடு போன்ற மற்ற வழிமுறைகள் ஹரினாமத்தைப் போல அவ்வளவாகப் பலனளிப்பதில்லை.
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர்
நமைவ கேவலம் கலௌ நாஸ்தி
ஏவ நாஸ்தி ஏவ
நாஸ்தி ஏவ கதிர் அன்யதா
[ Cc. ஆதி 17.21]
ஆகவே, நாம் இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்ய வேண்டும். ஆனால், திருநாமத்திற்கு செய்யப்படும் பத்தாவது குற்றம் என்னவென்றால், திருநாமத்தின் மகிமைகளை நாம் அறிந்திருந்தும், அதை உச்சரிப்பதில் நமக்கு ஆர்வம் இல்லாமல் இருப்பதுதான். எனவே, இந்த யுகத்தில் திருநாமம் மிகவும் விசேஷமானது. ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நமக்கு இந்த மகா மந்திரத்தை அருளினார் . தனது சிக்ஷாஷ்டக ஸ்லோகத்தின் இரண்டாம் ஸ்லோகத்தில், அவர் திருநாமத்தைப் போற்றுகிறார். முதல் ஸ்லோகத்தில் அவர் சங்கீர்த்தனத்தைப் போற்றுகிறார் . மூன்றாவது ஸ்லோகத்தில் நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே, இது ஒரு படிப்படியான செயல்முறை. சிலர் நான் சோகமாக இருப்பதாகக் கூறி, தங்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லை என்று சாக்குப்போக்கு சொல்கிறார்கள். கலியுகத்தின் ஒரே நல்ல குணம் மகா மந்திரத்தை உச்சரிப்பதுதான் . நாம் எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் உச்சரிக்க வேண்டும். எனவே, இந்தத் திருநாமத்தை ஆரத்தியின்போதும் நம்மால் உச்சரிக்க முடியும். சரிதானே? ஆண்கள், பெண்கள், சூத்திரர்கள் என யார் வேண்டுமானாலும் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிக்கலாம் . ஒருவர் பிறப்பால் பிராமணராக இருந்தாலும், அவர் வைஷ்ணவராக இல்லாவிட்டால், அவரால் குருவாக ஆக முடியாது என்று சாஸ்திரம் கூறுகிறது .
ஷாட்-கர்ம-நிபுணோ விப்ரோ
மந்த்ர-தந்திர-விசாரத:
அவைஷ்ணவோ குருர் ந ஸ்யாத்
வைஷ்ணவ: ஸ்வ-பாகோ குரு
[ பத்ம புராணம் ]
ஒரு பிராமணர் மிகவும் முன்னேறியவராக இருந்தும் , அவர் ஒரு பக்தராகவோ, வைஷ்ணவராகவோ இல்லாவிட்டால், அவர் குருவாக முடியாது என்று சாஸ்திரம் கூறுகிறது . ஆனால், மாமிசம் உண்பவர் வைஷ்ணவராக இருந்தால், அவர் குருவாக முடியும் . ஒரு வைஷ்ணவர் பிரசாதம் உண்கிறார் ! உங்கள் எல்லோரிடமும் பிரசாதம் இருக்கிறதா? நீங்கள் இங்குள்ள கோவிந்தனின் உணவகத்திற்குச் சென்று பிரசாதம் பெறலாம் ! ஆயுள் உறுப்பினர்களுக்கான பிரசாதம் , பக்தர்களுக்கான பிரசாதம் ! இதுபோல ஒரு வைஷ்ணவர் கிருஷ்ண பிரசாதம் உண்கிறார் !
ஹரிதாச தாகூர் மாமிசம் உண்ணும் ஒரு மிலேச்ச குடும்பத்தில் பிறந்தார் . ஆனால் ஒரு வைஷ்ணவராக, அவர் தினமும் பிரசாதம் உண்டு , மூன்று லட்சம் திருநாமங்களை உச்சரித்து வந்தார். அதனால், அனைவரும் ஹரே கிருஷ்ணாவை உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில் நீங்கள் அனைவரும் எனக்கு உதவுவீர்களா? நான் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்றேன், அங்கே பலர் என் கால்களைத் தொட்டு வணங்கினார்கள். நான் மருத்துவமனைக்குச் சென்றேன், செவிலியர்கள் குழுப் புகைப்படம் எடுக்க விரும்பினார்கள்! இது இந்தியா! இங்குள்ள மக்கள் மிகவும் ஆன்மீகமானவர்கள். அவர்களை உச்சரிக்க வைப்பதில் என்ன சிரமம்? ஆனால் நாங்கள் அதைச் செய்வதில்லை! நான் செய்கிறேன்! இதை யார் யாரெல்லாம் செய்கிறார்கள்?
நன்றி!
Lecture Suggetions
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு