முகம் கரோதி வாசலம் பாங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சத்வத்னம்
ஹரி சைதன்ய ī
ஜெயபதாகா சுவாமி: இன்று வியாச பூஜை அல்ல. இன்று அதிவாசம் . இந்த அதிவாச கீர்த்தனையில் – ஆனந்தேர சீம நை, நிரானந்த தூரே ஜாய் ! என்று நீங்கள் கேட்டீர்கள். ஆகவே, இந்தக் கீர்த்தனை , இது எங்களுக்குப் பெரும் ஆனந்தத்தைத் தருகிறது! ஹரிபோல்! இப்போது, செய்யப்படும் அதிவாசச் சடங்கு, நாளைய வியாச பூஜை சடங்கிற்காக மனதை ஒருமுகப்படுத்த அல்லது நிலைநிறுத்துவதற்காகச் செய்யப்படுகிறது. எனவே, தேவர்கள் ஓய்வெடுக்கத் திரும்பிச் செல்ல வேண்டும். தாயோ, தந்தையோ, கணவனோ, குருவோ , யாராக இருந்தாலும், சார்ந்திருப்பவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது . ஸ்ரீல பிரபுபாதரின் கருணையாலும், ராதா மாதவரின் கருணையாலும், பஞ்ச-தத்துவத்தாலும், நரசிம்மதேவப் பெருமானாலும் நம்மால் அதைச் செய்ய முடியும். அவர்களுடைய கருணையால் நம்மால் இதைச் செய்ய முடியும் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்காக, நான் கொடுத்த அறிவுரைகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். என் சீடர்களைக் கவனித்துக்கொள்ளவே நான் இ-கேர் (E-Care) அமைப்பை ஏற்படுத்தினேன். ஆனால், அவர்களால் எல்லா சீடர்களையும் சென்றடைய முடியாது என்று சொல்கிறார்கள்! அவர்கள் உங்களைச் சென்றடைகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது எப்படி சாத்தியமாகும் என்றும் எனக்குத் தெரியவில்லை.
TOVP கோயிலும், வேத கோளரங்கமும் எவ்வாறு படிப்படியாகக் கட்டி முடிக்கப்படுகின்றன என்பதை பிரஜவிலாச பிரபுவிடமிருந்து நீங்கள் கேட்டீர்கள். பல்வேறு பக்தர்கள் அளித்து வரும் பெரும் பங்களிப்புகளாலும் உதவிகளாலும், கௌரமண்டல பூமியிலுள்ள பல்வேறு ஸ்ரீபாத்களைப் புனரமைக்க உதவப் பலர் முன்வந்துள்ளனர்.
ஸ்ரீல பிரபுபாதர், தமது நூல்களை மொழிபெயர்க்கவும் விளக்கவுரைகள் எழுதவும் இரவு முழுவதும் உழைத்ததை நான் கண்டேன். அவரது தெய்வீக அருளாளர் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருந்தது என் பெரும் பாக்கியம்! ஆனால், ஸ்ரீல பிரபுபாதரின் நூல்கள் வழியாக இப்போதும் கூட நம்மால் அவரது தொடர்பைப் பெற முடிகிறது! உங்கள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிப்பீர்கள் என்றும், அதன் மூலம் உங்கள் வாழ்க்கை பூரணமடையும் என்றும் நான் நம்புகிறேன்.
இன்று காலை நான் ஸ்ரீமத் பாகவதம் வகுப்பு எடுத்து, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தின் மகிமைகளைக் கூறினேன் . நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தால், பல நன்மைகள் உண்டு. அதாவது, வேறு எந்த முறையும் இல்லை, இதுவே மிகவும் கருணையான முறையாகும். எனவே, அனைவரும் திருநாமத்திற்கு அவமதிப்பு செய்வதைத் தவிர்த்து, தங்கள் முறையிலான ஜபங்களை மிகவும் உண்மையாக உச்சரிப்பார்கள் என்று நம்புகிறேன். இப்போது, ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பங்களை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற விரும்புகிறேன். ஸ்ரீல பக்திவினோத தாகூர் உலகிற்கு மிகவும் பங்களித்திருப்பதால், அவருடைய பிறப்பிடத்தைப் பற்றி ஏதாவது செய்ய விரும்புவதாக அவர் என்னிடம் கூறினார்! கிருஷ்ண-கதா தேசத்திலிருந்து, பலராம கோவிந்த தாசர் மற்றும் பலர் இந்தத் திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளனர். ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பிறந்த இடமான பிர் நகர் திட்டத்திற்கான ஒரு அரங்கு இங்கே எங்கோ இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எனவே, அந்த அரங்கிற்குச் சென்று நீங்கள் உதவக்கூடிய பல்வேறு வழிகளைத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் ஒவ்வொருவரும் தினமும் தவறாமல் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ! எனவே, நாளை நாம் இதுபற்றி மேலும் விவாதிப்போம்!
அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்! Kṛṣṇe matir astu !
ஹரிபோல்!
Lecture Suggetions
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்