Text Size

20240107 13-வது பஞ்ச-க்ரோஷ பரிக்கிரமா உபன்யாசம்

7 Jan 2024|Tamil|Navadvīpa Maṇḍala Parikramā|Agartala, India

ஜயபதாக ஸ்வாமி: ஹரே கிருஷ்ண! ஸ்ரீல பிரபுபாதா கி ஜய! பஞ்ச-க்ரோஷ பரிக்ரமா கி ஜய! நான் இன்று பஞ்ச-க்ரோஷ பரிக்ரமாவை மாயாபூர் தொலைக்காட்சியில் (www.mayapur.tv-ல்) பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த வருடம் பரிக்ரமாவின் 13-வது வருடம் என்று நான் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வருடமும் சபலா ஏகாதசி அன்று இந்த பரிக்ரமா மேற்கொள்ளப்படுகிறது. இப்போது நான் இதனை அகர்தலாவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மாயாபூரில் இருந்திருந்தால் பரிக்ரமா மேற்கொண்டிருக்கும் 700 பக்தர்களுடன் நானும் இருந்திருப்பேன். சபலா ஏகாதசியான இன்று இந்த பரிக்ரமா செய்யப்படுவதை பார்க்கும் போது நான் மிகுந்த ஆனந்தமடைகிறேன். நீங்கள் அனைவரும் ஜகந்நாதர் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். 700 பக்தர்கள் இந்த பரிக்ரமாவை மேற்கொண்டுள்ளனர். பகவான் சைதன்யர் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பரிக்ரமா செய்வார் என்பதை நான் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பகவான் சைதன்யரின் இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நான் பார்க்கிறேன். பெண்கள், ஆண்கள் என எல்லோருமே ஆனந்தமாக இந்த பரிக்ரமாவை மேற்கொண்டுள்ளனர்.

பஞ்ச-க்ரோஷ பரிக்ரமா கி ஜய!

- END OF TRANSCRIPTION -
Transcribed by துர்லப ராதா தேவி தாஸி (12 ஜனவரி 2024)
Verifyed by
Reviewed by

Lecture Suggetions